தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரத்தில் பைக்ரேசில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது பைக்குகள் பறிமுதல்

விழுப்புரம், அக். 4: விழுப்புரத்தில் பைக்ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் நகரப்பகுதி மற்றும் புறவழிச்சாலைகளில் பைக்ரேஸ் நடப்பதாக வந்த புகாரின்பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனையில் கொட்டப்பாக்கத்துவேலி அருகே பைக்ரேசில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த முத்து(25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து பைக்கினை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதேபோல் விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் முன்பு பைக்ரேசில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பவுல்(20) என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் பழைய அரசு மருத்துவமனை முன்பு நடத்திய வாகன சோதனையின்போது பைக்ரேசில் ஈடுபட்ட ஜிஆர்பிதெரு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன்(29) என்பவர் கைது செய்யப்பட்டு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. நகர காவல்நிலைய போலீசார் காந்திசிலைஅருகே நடத்திய வாகன சோதனையின்போது கோலியனூரை சேர்ந்த புஷ்பராஜ்(28) என்பவர் பைக்ரேசில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement