தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காந்தி ஜெயந்தியன்று மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற தவெக நிர்வாகி கைது

திண்டிவனம், அக்.4: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மதுபாட்டில்களை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடை மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு தரப்பினர் புதுவை மதுபானங்கள் மற்றும் தமிழக மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திண்டிவனம் செஞ்சி பேருந்து நிலையம் அருகே திண்டிவனம் நகர போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செஞ்சி பேருந்து நிறுத்தத்தின் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரை விசாரித்தபோது தமிழ்நாடு டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

அவரை போலீசார் பிடிக்க முற்பட்டபோது தப்பி ஓடியவரை துரத்திச் சென்று பிடித்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில் அவர் திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் மணிகண்டன்(20) என்பதும் தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டிவனம் நகர நிர்வாகியாக உள்ளார் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த ரூ.14,000 மதிப்பிலான 72 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement