தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விருத்தாசலத்தில் பரபரப்பு பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

விருத்தாசலம், டிச. 2: விருத்தாசலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு விருத்தாசலம் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பத்திர பதிவு சம்பந்தப்பட்ட பணிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் பத்திர பதிவு செய்வதற்கு அலுவலர்கள் முறைகேடாக பணம் அதிக அளவில் பெறுவதாகவும், அலுவலக நேரத்தை கடந்து இரவு நேரங்களில் பத்திர பதிவுகள் நடந்து வருவதாகவும், இடைத்தரகர்கள் மூலம் அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறுவதாகவும் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றது.

Advertisement

அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுமார் 8 மணியளவில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு அழகேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் நுழைந்து திடீர் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அலுவலகத்தை இழுத்து பூட்டி உள்ளே இருந்தவர்களை வெளியே விடாமலும், வெளியே இருந்தவர்களை உள்ளே விடாமலும் தடுக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கணக்கில் வராத பணம் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு வந்த எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் வாகனங்களின் சாவிகளை பறிமுதல் செய்து வாகனங்களின் பெட்டிகளில் ஏதேனும் பணம் இருக்கிறதா? முறைகேடான பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்கள் இருக்கிறதா, கணக்கில் வராத பணம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement