தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டிவனம் அருகே ஓட்டலில் ஐ.டி. பெண் ஊழியர் தவறவிட்ட நகையை போலீசார் மீட்டு ஒப்படைப்பு

திண்டிவனம், டிச. 2: திண்டிவனம் அருகே உணவகத்தில் தவறவிட்ட 18 சவரன் நகை மற்றும் லேப்டாப் ஆகியவற்றை போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர். சென்னை தாம்பரம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் மனைவி நளினி (28) ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை சென்னையில் இருந்து காரில் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு திண்டிவனம் வழியாக செல்லும் போது, சலாவதி கல்லூரி சாலை சந்திப்பில் உள்ள தனியார் உணவகத்தில் தேநீர் அருந்தியுள்ளனர். அப்போது அங்கிருந்து கிளம்பும்போது நளினி தான் கொண்டு வந்த பேக்கை அங்கேயே மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். அதில் 18 சவரன் நகைகள், லேப்டாப் இருந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் வீட்டிற்கு சென்று பார்த்த போது பேக்கை மறந்து வைத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து திண்டிவனம் ரோசணை காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளனர். அதனையடுத்து நெடுஞ்சாலை ரோந்து உதவி ஆய்வாளர் மாணிக்கவாசகத்திற்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக உணவகத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு சோதனை செய்த போது நளினி வைத்து சென்ற பேக் அதே இடத்தில் இருந்துள்ளது. இதையடுத்து பேக்கை சோதனை செய்த போது அதில் 18 சவரன் நகை இருந்துள்ளது. இதனை தொடர்ந்து ரோசணை காவல் நிலையத்திற்கு வந்த நளினியிடம் 18 சவரன் நகை, லேப்டாப் பேக் ஆகியவற்றை போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement