தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஓடும் பேருந்தில் 2 பவுன் நகை திருட்டு

சின்னசேலம், ஆக. 2: கச்சிராயபாளையம் அருகே பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு மனைவி மாரியம்மாள் (45). விவசாய கூலி தொழிலாளி. இவர் தனது குடும்ப செலவிற்காக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் தனது இரண்டு பவுன் நகையை அடகு வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாரியம்மாள் கள்ளக்குறிச்சியில் உள்ள நகை அடகு கடைக்கு சென்று தனது நகையை மீட்டு பர்ஸில் வைத்து, பின் பர்சையும், செல்போனையும் ஒரு கட்டைப்பையில் வைத்துக் கொண்டு, கச்சிராயபாளையம் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறி நின்று கொண்டு பயணம் செய்தார். பின்னர் அக்கராய பாளையத்தில் இறங்கி தனது அக்கா மகளை பார்த்துவிட்டு மீண்டும் பஸ் ஏற வந்தார். அப்போது பையைப் பார்த்தபோது மணி பர்சை காணவில்லை. அதிலிருந்த நகையையும் செல்போனையும் யாரோ மர்ம ஆசாமி திருடி சென்றுவிட்டான். இதுகுறித்து மாரியம்மாள் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News