தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மரக்காணம் அருகே ஏரிக்கரை அய்யனார் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

மரக்காணம், ஆக.2: மரக்காணம் அருகே கந்தாடு ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ளது ஏரிக்கரை அய்யனார் கோயில். இக்கோயில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குலதெய்வ கோயிலாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் அய்யனார் கோயிலுக்கு பக்தர்களின் வருகையும் அபிஷேக ஆராதனைகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் இக்கோயிலுக்கு ஆடி மாத திருவிழா செய்ய அப்பகுதி முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி ஏற்பாடு செய்த பிறகு கோயிலை மூடிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கோயிலுக்கு பொதுமக்கள் வந்துள்ளனர். அப்போது கோயில் எதிரில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் கோயிலின் உள்ளே இருந்த பித்தளை வேல், மணி, விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். திருடுபோன பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு 40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related News