தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரம்- ராமேஸ்வரம் அதிவிரைவு சிறப்பு ரயில் பெண்ணாடத்தில் நிறுத்தம்

 

Advertisement

விருத்தாசலம், மே 31: விழுப்புரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் பெண்ணாடம் ரயில் நிலையம் வந்தபோது பொதுமக்கள் வரவேற்றனர். விழுப்புரத்திலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் பெண்ணாடம் ரயில் நிலையம் வழியாக தினமும் சென்று வருகிறது. ஆனால் இந்த ரயில் பெண்ணாடத்தில் நின்று செல்லாமல் இருந்து வந்தது. இது சம்பந்தமாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுப்பிரசாத் மற்றும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஆகியோருக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் இந்த ரயில் பெண்ணாடத்தில் நின்று செல்ல பாராளுமன்ற உறுப்பினர்கள் விஷ்ணு பிரசாத் மற்றும் திருமாவளவன் ஆகியோர் முயற்சி மேற்கொண்டதன் அடிப்படையில் ரயில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் விழுப்புரம்- ராமேஸ்வரம் சென்றுவரும் அதிவிரைவு சிறப்பு ரயில் பெண்ணாடத்தில் நின்று செல்ல உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று விழுப்புரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் (எண்: 06105) காலை 5.05 மணிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து விழுப்புரம் செல்லும் ரயில் (எண்: 06106) இரவு 9.30 மணிக்கும் பெண்ணாடத்தில் நின்று செல்கிறது. அதனை வரவேற்கும் விதமாக திட்டக்குடி சமூக ஆர்வலர் ராஜதுரை, இறையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி, பெண்ணாடம் நகர தலைவர் கந்தசாமி, விருத்தாசலம் சுபமணிகண்டன், மேற்கு மாவட்ட செயலாளர் இருதயசாமி, மாவட்ட துணைத்தலைவர் எஸ்மா கந்தசாமி உள்ளிட்டோர் ரயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement