தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இலவச வீட்டுமனை பட்டா வழங்குக கிராம மக்கள் மனு

 

விருதுநகர், ஜூலை 15: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காரியாபட்டி ஒன்றியம் பாம்பாட்டி ஊராட்சி பணிக்கனேந்தல் கிராம மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், காரியாபட்டி ஜெகஜீவன்ராம் காலனியில் 250 ஆதிதிராவிட குடுமபங்களும், பனிக்கனேந்தல் கிராமத்தில் 80 ஆதிதிராவிடர் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இதில் 150 குடும்பத்தினர் தினக்கூலிகளாக சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

ஜெகஜீவன்ராம் காலனி மற்றும் பனிக்கனேந்தல் கிராம ஆதிதிராவிட குடும்பத்தினருக்கு 6.30 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்து 130 பயனாளிகளுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டது. வருவாய்த்துறை உத்தரவின்படி கடந்த பிப்.8ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இ-பட்டா வழங்கினார். இ-பட்டா பெற்ற 48 பயனாளிகள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். மீதமுள்ள 76 பிளாட்டுகளை இலவவச பட்டாவாக வழங்க வேண்டும் என அளித்த மனு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து இலவச பட்டா வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.