தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கழிவு குப்பைகளை ஏரியில் கொட்ட வந்த டிராக்டர்களை கிராம மக்கள் சிறைபிடித்து வாக்குவாதம் செய்யாறு அருகே பரபரப்பு

செய்யாறு, அக். 25: செய்யாறு அடுத்த வட எலப்பாக்கம் கிராம ஏரியில் நேற்று காலை 10 மணி அளவில் கழிவு குப்பைகளை டிராக்டர்களில் ஏற்றி வந்து கொட்டியுள்ளனர். இதனை அறிந்த கிராம மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் குப்பைகளை கொட்ட வந்த 6 டிராக்டர்களை சிறை பிடித்து டிராக்டர் ஓட்டுனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்த கழிவு குப்பைகள் கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டியதாக டிராக்டர் டிரைவர்கள் தெரிவித்தனர். இதனிடையே தகவல் அறிந்து வந்த செய்யாறு போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகளை திரும்ப எடுத்து செல்வதாகவும், கொட்ட வந்த டிராக்டர்களை திரும்ப அனுப்புவதாகவும் உறுதியளித்தும் அதனை கேட்க மறுத்த கிராம மக்கள் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து குப்பைகளை அள்ள ஏற்பாடு செய்தால்தான் குப்பை கொட்டிய வாகனங்களை விடுவிப்போம் என தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு கொட்டிய குப்பைகள் முழுவதும் திரும்ப அள்ளுவதற்கு ஏற்பாடு செய்தனர். அதன் பின்பு கிராம மக்கள் குப்பை கொட்டிய 6 டிராக்டர்களை விடுவித்தனர். கழிவு குப்பைகளை ஏற்றி வந்து ஏரியில் கொட்ட வந்த டிராக்டர்களை சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News