தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பு.த. கட்சி கூட்டத்தில் விசிக கல் வீச்சு

 

Advertisement

பெரம்பலூர்,மே.19: பெரம்பலூர் புது பஸ்டாண்டு தென்புறமுள்ள தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் நேற்று(18ம் தேதி) புரட்சித் தமிழகம் கட்சி சார்பில் வாழ்வுரிமை அரசியல் மாநாடு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், கூட்டம் நடந்த ஹோட்டல் அருகே வைக்கப் பட்டிருந்த பேனர்களையும், அக்கட்சியின் கொடிகளையும் கிழித்து சேதப்படுத்தினர்.

தொடர்ந்து, அந்த ஹோட்டல் மீது கற்களை வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகுமாறு அறிவுறுத்தியதன்பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், புரட்சி தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கடந்த சில வாரங்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை அவதூறாக பேசி வருவதைக் கண்டித்தும், கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெரம்பலூர் புது பஸ்டாண்டு வளாகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, போலீசாரின் அறிவுறுத்தலையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.தாக்குதல் காரணமாக தனியார் ஹோட்டல் கதவுகள் உள் புறமாக பூட்டிக்கொண்டு புரட்சித் தமிழகம் கட்சியினர் கூட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால் பெரம்பலூர் புது பஸ்டாண்ட் தென்புறம் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது.

Advertisement

Related News