தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜயமங்கலம் பாரதி பள்ளி 10, 11ம் வகுப்பு அரசு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்

பெருந்துறை, மே 19: பெருந்துறை, விஜயமங்கலம் பராதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள், 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். 10ம் வகுப்பில், இப்பள்ளி மாணவி நேகா, 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று, பெருந்துறை தாலுகா அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவி பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள், தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-99, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 பெற்றுள்ளார். ரக்சன், 495 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், பவிஷ் மற்றும் வர்ஷினி ஆகியோர் 494 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.

Advertisement

மேலும், 490 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 48 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 201 பேரும் பெற்றனர். 11ம் வகுப்பில், இப்பள்ளி மாணவி தனுஷியா, 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று, ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, இயற்பியல்-100, வேதியியல்-99, கணினி அறிவியல்-100 பெற்றுள்ளார். தர்சினி, 593 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், கவுதம் 591 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளார். 12ம் வகுப்பு, சந்தியா 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்று பெருந்துறை தாலுகா அளவில் முதலிடம் பெற்றுள்ளார். 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளித்தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

 

Advertisement