தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் பிறந்தநாள் ஊர்வலத்தில் தவெக நிர்வாகிகள் கோஷ்டி மோதல் ஆரணியில் பரபரப்பு

ஆரணி: ஆரணியில் நடந்த விஜய் பிறந்தநாள் ஊர்வலத்தில் தவெக நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் வடக்கு மாவட்ட செயலர் சத்தியா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது, ஆரணி டவுன் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த தவெக கட்சியின் உறுப்பினரும், ஓவியருமான ஹரிஸ்(45), திடீரென அங்கு வந்து தான் விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகியாக இருந்து வருவதாகவும், எனக்கு எதற்கு நிகழ்ச்சி குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

Advertisement

அப்போது, ஊர்வலமாக சென்ற தவெக கட்சி மாவட்ட செயலாளரை திடீரென தடுத்து நிறுத்தி பேசியபோது, ஹரிஸ்யை, அவர் தள்ளிவிட்டதால், ஆத்திரமடைந்த அவர் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ஹரிஸ்சிடம் பேச்சு நடத்தினர். பின்னர் நீண்டநேரம் தகராறில் ஈடுபட்ட ஹரிஷ் அங்கிருந்த சென்றார்.

தொடர்ந்து, ஹரிஸ் கூறுகையில், நான் தவெக கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறேன். கடந்த 13 ஆண்டுகளாக விஜயின் மக்கள் இயக்கத்தில் இருந்து வருகின்றேன். கடந்த வருடம் விஜய் பிறந்த நாளில் அன்னதானம் வழங்கினேன். கள்ளகுறிச்சி கள்ளச்சாரயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க தலைமையில் இருந்து அறிக்கை வந்தது. அதனால், நாங்கள் எல்லம் சேர்ந்து இளைஞர் அணி சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கினேன்.

ஆனால், கட்சியில் நடக்கும் தவறுகளை கேட்டால் கட்சிக்கு முரணாக நடப்பதாக கூறுவதா, இந்த பிரச்னைகள் குறித்து நான் தலைமைக்கு தெரிவித்தால், பொதுச்செயலாளர் என்ன பிரச்டின என கேட்டால் அதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் தருகிறேன். நான் கட்சி தலைமைக்கும், மாவட்ட அலுவலகத்திற்கு சென்றால் ஹரிஸ் என பெயரை கேட்டால், கேட்டை மூடிவிடுகிறார்கள்.

அவருக்கு நான் டிசைனர், என்னுடைய ஊர் கேஜிஎப்க்கு ஆனந்தை அழைத்து சென்று, 40 மன்றங்கள் திறந்து வைத்தோம். அப்போது ஹரிஸ் தெரியும், இப்ப ஆனந்த் சாருக்கு தெரியலையா, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் செய்யாத தவறையா நான் செய்துவிட்டேன். எனக்கு எல்லாம் தலைவரு விஜய் சார்தான். நான் ஏன் எதற்கு ஆன்ந்த் சார் காலில் விழவேண்டும். கட்சியில உழைத்தவர்களுக்கு பதவி கொடுங்க, அதைவிட்டு யாரு உங்களுக்கு விசுவாசி யாகவும், பணம் கொக்கிறார்களோ அவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்து என்னை போன்று கட்சியில் உழைப்பவர்களை, செய்யாரிலிருந்து வந்துள்ள மாவட்ட செயலாளர் என்னை ஓதுக்கி வைத்து, சாதி ரீதியாக தன்னை தனிமைப்படுத்தி கட்சி பணியை செய்யாமல் தடுத்து வருகிறார், என்றார்.

Advertisement

Related News