தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்டிஓ சோதனைச்சாவடியில் விஜிலென்ஸ் போலீசார் ரெய்டு * மோட்டர் வாகன ஆய்வாளரின் ராணிப்பேட்டை வீட்டிலும் சோதனை * கணக்கில் வராத ₹5.84 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் காட்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள

வேலூர், அக்.24: காட்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள ஆர்டிஓ சோதனைச்சாவடியிலும், தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளரின் ராணிப்பேட்டை வீட்டிலும் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ₹5.84 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பலர் அதிகளவு லஞ்சம் வசூலிக்க தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை கையும் களவுமாக பிடித்து வருகின்றனர். இதனால் லஞ்சம் வாங்குபவர்கள் அச்சமடைந்தாலும், சிலர் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் தமிழக- ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள ஆர்டிஓ சோதனைச்சாவடியில் வாகனங்களில் விதிகளை மீறி கொண்டு வரப்படும் சரக்குகள், வாகனங்களின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் என பல்வேறு நிலைகளில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவு லஞ்சம் வசூலிப்பதாக விஜிலென்ஸ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மைதிலி, எஸ்ஐ இளவரசன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள ஆர்டிஓ சோதனைச்சாவடியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசுக்கு வர வேண்டிய வருவாய் தவிர்த்து, கணக்கில் வராத ₹1 லட்சத்து 38 ஆயிரத்து 900 ரொக்கப்பணத்தை கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் தேவிஜெயந்தி மற்றும் அலுவலக உதவியாளர் மற்றும் தனிநபர்கள் 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து டிஎஸ்பி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் மைதிலி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை ராணிப்பேட்டை நவல்பூரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் தேவிஜெயந்தி வீட்டில் சோதனையை தொடங்கினர். இதில் கணக்கில் வராத ₹4 லட்சத்து 45 ஆயிரத்து 900 ரொக்கப்பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காட்பாடி சோதனைச்சாவடி மற்றும் ராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் வீடு ஆகிய 2 இடங்களில் மொத்தம் ₹5.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது, ‘எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் நேற்று அதிகாலை சோதனை நடத்தினோம். இதில் கணக்கில் வராத ₹1 லட்சத்து 38 ஆயிரத்து 900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மோட்டர் வாகன ஆய்வாளர் தேவிஜெயந்தி வீட்டில் ₹4 லட்சத்து 45 ஆயிரத்து 900 மற்றும் 6 சொத்து ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளோம்’ என்றனர்.

Advertisement

Related News