தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடும் பஸ்சில் மாணவன் மீது சரமாரி தாக்குதல் வீடியோ வைரலால் பரபரப்பு குடியாத்தம் அருகே

குடியாத்தம், அக்.2: குடியாத்தம் அருகே ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவன் மீது மர்ம ஆசாமிகள் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் காந்தி நகரில் உள்ள அரசு கலை கல்லூரியில், கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த மாணவன் 3ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் கல்லூரி முடிந்ததும் இந்த மாணவன் தனியார் பஸ்ஸில் கே.வி.குப்பத்திற்கு சென்று கொண்டிருந்தார். தொடர்ந்து, குடியாத்தம் அடுத்த சென்றாம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென பஸ்சுக்குள் ஏறிய வாலிபர்கள் சிலர், பஸ்சின் இடது பக்கம் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவனை சரமாரியாக தாக்கிவிட்டு, கீழே இறங்கி தப்பிவிட்டனர். இதை பார்த்து பஸ்சில் இருந்த பொதுமக்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம ஆசாமிகள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்ட கல்லூரி மாணவன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பஸ்ஸில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கல்லூரி மாணவனை தாக்கிய மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், கல்லூரி மாணவனை மர்ம ஆசாமிகள் தாக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Related News