தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒரே சாலையில் அடுத்தடுத்து 8 இடங்களில் அமைப்பு; கதறவிடும் அதிர்வு வேகத்தடைகள்: வாகன உதிரி பாகங்கள் சேதமடைவதாக புகார்

விருதுநகர், ஜூன் 5: விருதுநகரின் முக்கிய சாலையாக ராமமூர்த்தி சாலை உள்ளது. இதன் வழியாகவே, காரியாபட்டி, மல்லாங்கிணறு, பேராலி, பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். மேலும், இச்சாலையானது, விருதுநகர் நகர் பகுதியிலிருந்து விரைவாக அருப்புக்கோட்டை சாலைக்கு செல்லவும் மிகவும் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சாலை துவங்கும் அல்லம்பட்டி முக்குரோடு பகுதி முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை சுமார் 1 கி.மீ தூரத்தில் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமானது, சாலையின் குறுக்கே சிறிய அளவிலான வேகத்தடைகளை 8 இடங்களில் அமைத்துள்ளது. அதாவது அடுத்தடுத்து சில அடி தூர இடைவெளியில் வேகத்தடைகளை போட்டுள்ளனர்.

இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் வாகன உதிரி பாகங்கள் சேதமடைவதாக புகார் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், சாலையில் செல்லும் வாகனங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி நோயாளிகளை அவதிக்குள்ளாக்கும் சிறிய அளவிலான இந்த வேகத்தடைகளை அகற்றிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கார் ஓட்டுநர் செண்பகமூர்த்தி கூறுகையில், விருதுநகரில் பல்வேறு இடங்களில் அதிர்வு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரசு மருத்துவமனையில் இருந்து அருப்புக்கோட்டை ரோடு செல்லும் வழியில் 1 கி.மீ தூரத்தில் 8 அதிர்வு வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த வேகத்தடைகளின் அதிர்வுகளினால் முதுகுத் தண்டுவடத்தில் வலி ஏற்படுகிறது. மேலும் தொடர்ந்து அந்தப் பாதையில் பயணிப்பதால் வண்டியின் உதிரி பாகங்கள் சேதமடைகிறது. எனவே இந்த அதிர்வு வேகத்தடைகளை அகற்றி பழைய முறையிலான வேகத்தடைகளை தேவையான இடத்தில் மட்டும் அமைக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Related News