தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெங்கடாசலபதி கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றம் 10ம் தேதி தேரோட்டம்

சாத்தூர், ஜூலை 3: சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி கோயில் ஆனி மாதம் பிரம்மோற்சவ பெரும் திருவிழா மற்றும் திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவ திருவிழாவில் ஒவ்வொரு நாளும் வெங்கடாசலபதி உற்சவர் அனுமந்த வாகனம், சேச வாகனம், அன்ன வாகனம், கஜ வாகனம், ஜடாயு, கருட வாகனம், உள்ளிட்ட வாகனத்தில் ரத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த நிலையில் ஆனி மாத பிரம்மோற்சவ பெரும் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முன்னதாக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. சாத்தூரப்பன் என்று அழைக்கப்படும் வெங்கடாசலபதி உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், பன்னீர், ஜவ்வாது, இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திவ்யப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளுக்குபின் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் இலட்சுமணன், சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, கோயில் அறங்காவலர் குழு தலைவர் நாகராஜ், அறங்காவலர்கள் சுப்புராஜ், முருகேஸ்வரி, பால்பாண்டி, மாரியப்பன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் வெங்கடாசலபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆனி பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News