தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கியதில் ரூ.5.25 கோடி வருவாய் அதிகாரிகள் தகவல் தீபாவளி பண்டிகையையொட்டி

வேலூர், அக்.31: தீபாவளி பண்டிகையையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கியதில் ரூ.5.25 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள், தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். அந்த வகையில், வேலூர் போக்குவரத்து மண்டலத்தின் சார்பில் இயக்கப்பட்ட பஸ்கள் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்தனர். அதேபோல், தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம் லட்சக்கணக்கானோர் பயணம் செய்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.5.25 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Advertisement

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கியது வேலூர் போக்குவரத்து மண்டலம். இந்த மண்டலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விஷேச நாட்களில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 17ம் தேதி ரூ.69.55 லட்சமும், 18ம் தேதி ரூ.90 லட்சமும், 19ம் தேதி ரூ.1.08 கோடியும், 20ம் தேதி ரூ.92 லட்சமும், 21ம் தேதி ரூ.92 லட்சமும், 21ம் தேதி ரூ.60.06 லட்சமும், 22ம் தேதி 1.05 கோடி என மொத்தம் ரூ.5 கோடியே 25 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.65-70 லட்சம் வருவாய் கிடைக்கும். சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் ரூ.1.10 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Related News