தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் நிறுவன மேலாளர் மனைவியிடம் ரூ.20.91 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை காட்பாடியில் அதிக லாபம் ஆசைக்காட்டி

வேலூர், ஜூலை 31: காட்பாடியில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைக்காட்டி தனியார் நிறுவன மேலாளரின் மனைவியிடம் ஆன்லைனில் ரூ.20.91 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் பழைய காட்பாடியை சேர்ந்தவர் தனியார் நிறுவன மேலாளரின் மனைவி. இவரது வாட்ஸ்அப்பிற்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறுஞ்செய்தி அடிக்கடி வந்துள்ளது. அதை உண்மையென நம்பியவர், அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கில் சென்று வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்துள்ளார்.

Advertisement

தெடர்ந்து அந்த குரூப்பில் இருந்த உறுப்பினர்கள் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பது தொடர்பான விளம்பர திட்டங்களை அதில் பதிவு செய்துள்ளனர். மேலும் அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளார். பல்வேறு தவணைகளாக ரூ.20.91 லட்சம் முதலீடு செய்ததாக தெரிகிறது. ஆனால் கூறியபடி அதிக லாபம் கிடைக்கவில்லையாம். இதனால் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முயன்றுள்ளார். அப்போது கூடுதலாக முதலீடு செய்தால் மட்டுமே அந்த பணத்தை திரும்ப எடுக்க முடியும் என அந்த குரூப்பில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர் இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement