தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊசி போட்டு தொழிலாளியை கொன்ற ஜார்க்கண்ட் வாலிபருக்கு ஆயுள் தண்டனை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வேலூருக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தபோது

வேலூர், ஜூலை 30: வேலூருக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தபோது, வந்து தொழிலாளியை ஊசி போட்டு கொலை செய்த ஜார்க்கண்ட் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது.

Advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமிர்தம்பா(35). இவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த பாடோ ஓரன், நிக்கமல், அக்கீல்சர்மா, சுனில்குமார் ஆகிய 4 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களிடம் தலா ரூ.1.10 லட்சத்தை கடந்த 2007ம் ஆண்டு வாங்கிக்கொண்டு, வேலூருக்கு அழைத்து வந்தார். அப்போது, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே லாட்ஜில் தங்கி, மருத்துவப் பரிசோதனை செய்வதாக கூறி, 5 பேருக்கும் ஊசியை செலுத்தினார். அதில் தொழிலாளி பாடோ ஓரனுக்கு அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேர் நோய்வாய்ப்பட்டனர்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அமிர்தம்பாவை கைது செய்தனர். தொடர்ந்து 2015ல் ஜாமீனில் வெளியே சென்ற அமிர்தம்பா தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளியில் செல்லமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் ஜார்கண்ட் சென்று அமிர்தம்பாவை கடந்தாண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் கோர்ட் வளாகத்தில் உள்ள வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட அமிர்தம்பாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், அபராதம் செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.

Advertisement