தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டிட மேஸ்திரி குடும்பத்திற்கு ரூ.15.15 லட்சம் இழப்பீடு வேலூர் கோர்ட் உத்தரவு லோடு ஆட்டோ மீது மோதி உயிரிழந்த

வேலூர், அக்.29: லோடு ஆட்டோ மீது மோதி உயிரிழந்த கட்டிட மேஸ்திரி குடும்பத்திற்கு ரூ.15.15 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலுார் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கிழச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (23), கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் காட்பாடி-குடியாத்தம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கொசவன்புதூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக காளிதாஸ் பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

இந்நிலையில் தனது கணவர் இறப்புக்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரது மனைவி தீபா, வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி சாண்டில்யன் முன்னிலையில் நடந்தது. அதில், மனுதாரரின் கணவர் இறப்புக்கு லோடு ஆட்டோவை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.15.15 லட்சமும், ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், லோடு ஆட்டோ உரிமையாளரும், இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Related News