தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் குழந்தையை கால்வாயில் வீசிய தந்தை, பாட்டி கைது சிசிடிவி கேமரா காட்சிகளால் சிக்கினர் வேலூர் பென்ட்லண்ட் மருத்துவமனை அருகே

வேலூர், நவ.26: வேலூர் பென்ட்லண்ட் மருத்துவமனை அருகே பெண் குழந்தையை கால்வாயில் வீசிய தந்தை, பாட்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர். வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனை சாலை வழியாக நேற்று முன்தினம் காலை சென்றவர்கள், மருத்துவமனை காம்பவுண்ட் சுவரை யொட்டியுள்ள கால்வாயில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வேலூர் தெற்கு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜிபிஎச் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

Advertisement

கால்வாயில் வீசப்பட்டிருந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருக்கும் என்பதால் அரசினர் பல்நோக்கு மருத்துவமனையிலோ அல்லது அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலோ பிறந்திருக்கலாம் என்பதால், தங்கள் விசாரணையை ஜிபிஎச் பல்நோக்கு மருத்துவமனை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் குழந்தையை ஒரு ஆண் தூக்கிச் சென்று கால்வாயில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அந்த நபர் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த வினோத்(25) என்பதும், இவரது மனைவிக்கு கடந்த 22ம் தேதி காலை 11.30 மணிக்கு அறுவை சிகிச்சையின் போது 7 மாத பெண் குழந்தை இறந்ததே பிறந்ததும் தெரியவந்தது. பின்னர், மருத்துவர்கள் இறந்த குழந்தையை வினோத்திடம் கொடுத்துள்ளனர். பின்னர் வினோத் மற்றும் அவரது தாய் சுமதி(55) ஆகிய 2 பேரும் இறந்த குழந்தையை மருத்துவமனை அருகே கால்வாயில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதை அவர்கள் விசாரணையில் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News