தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோர்தானா அணையில் இருந்து 2,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் எம்எல்ஏக்கள் மலர் தூவி வரவேற்பு கவுண்டன்யா மகாநதி வழியாக

குடியாத்தம், அக்.25: மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி உபரிநீர் கவுண்டன்யா மகாநதி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்கள் மலர் தூவி வரவேற்றனர். ஆந்திர- தமிழக எல்லையோரம் அமைந்துள்ள மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகும். ஆந்திரா வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement

இதனால் கவுண்டன்யா மகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள புதிய பாலத்தின் கீழ் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், நேற்று அணைக்கட்டு எம்எல்ஏவும், சட்டமன்ற பொது நிறுவனங்கள் ஆய்வுக்குழு தலைவருமான ஏ.பி.நந்தகுமார், குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் ஆகியோர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். அப்போது, நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன், ஒன்றிய செயலாளர் பிரதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நெல்லுர்பேட்டை ஏரியை தூர்வாரி சுற்றுலாத் தலமாக மாற்றப்படும். இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இதுவே எனது தேர்தல் வாக்குறுதி. 2026ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்றார்.

Advertisement

Related News