தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3 ஆறுகள் ஒன்று சேர்ந்து தண்ணீர் கொட்டும் நீர் வீழ்ச்சி ரம்மியமாக காட்சியளிக்கிறது ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமத்தில்

ஒடுகத்தூர், அக்.24: ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமத்தில் 3 ஆறுகள் ஒன்று சேர்ந்து தண்ணீர் கொட்டும் நீர்வீழ்ச்சி ரம்மியமாக காட்சியளிக்கிறது. வேலூர் மாவட்டத்தில் குளிர்ச்சியாகவும், இயற்கை எழில் கொஞ்சும் மலை கிராமங்களில் ஒன்று ஜவ்வாதுமலை தொடரில் அமைந்துள்ள பீஞ்சமந்தை மலை கிராமம். இந்த மலை கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட கானாறுகள், 30க்கும் மேற்பட்ட ஓடைகள் பாய்ந்தோடுகிறது. இங்கு பெரியபணப்பாறை பகுதியில் உருவாகும் சிற்றாறு தேந்தூர், தொங்குமலை, சின்ன எட்டிப்பட்டு வழியாகவும், கட்டிப்பட்டு பகுதியில் உருவாகும் மற்றொரு சிற்றாறு, குப்சூர், பீஞ்சமந்தை வழியாக செல்கிறது. அதேபோல், நம்மியம்பட்டு அருகே உருவாகும் ஆறு கோரத்தூர், சாட்டாத்தூர், பெரிய எட்டிப்பட்டு வழியாக செல்கிறது. இவ்வாறு 3 ஆறுகள் சின்ன எட்டிப்பட்டு அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஒன்றாக கலந்து நீர்வீழ்ச்சியாக மாறி ரம்மியமாக காட்சி தருகிறது.

Advertisement

அதுமட்டுமின்றி, மலை கிராமங்களில் இது போன்று ஏராளமான வனப்பகுதிகளில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளது. தற்போது, பெய்த கனமழையால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றியுள்ள மலை கிராம மக்கள் ஆர்வத்துடன் நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இருந்தாலும், சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் தண்ணீர் கொட்டும் உயரமான பாறைகள் மீது‌ நின்று செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்கின்றனர். இதனால், வனத்துறையினரும் சற்று இதன் மீது தனி கவனம் செலுத்தி ஆபத்தான முறையில் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

Related News