தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடியிருப்பு, பள்ளி வளாகத்தில் சூழ்ந்திருந்த வெள்ளம் ஜேசிபி மூலம் அகற்றம் கே.வி.குப்பம் அருகே

கே.வி.குப்பம்,அக்.23: கே.வி.குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் காவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது. அதே போல் பவளத்துறை, தாமோதரன் பேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சுமார் 3 அடி அளவில் சூழ்ந்திருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் பலராமன், பிடிஓக்கள் வேலு, ராஜன் பாபு உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அங்குள்ள மழை வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அங்கிருந்து வெளியேற்றி ஊராட்சி மன்ற அலுவலக அருகில் பழைய பள்ளி கட்டிடத்தில் தங்க வைத்தனர். மேலும் நீர் சூழ்ந்துள்ள காரணமாக இருந்த பாண்டியன் மடுகு கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை ஜேசிபி மூலம் ஊராட்சி நிர்வாகத்தினர் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள சாலை குறுக்கே அமைக்கப்பட்ட பைப்லைன் வழியாக மழை நீர் செல்ல இயலாததால் தற்காலிகமாக சாலை துண்டிக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. இந்த பணியின் போது ஊராட்சி நிர்வாகத்தினர், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement