தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரியில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் 4 பேர் கைது சேலம், மதுரை, கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மேற்கு வங்கத்திலிருந்து

குடியாத்தம், செப்.23: குடியாத்தம் அருகே மேற்கு வங்கத்தில் இருந்து லாரியில் கஞ்சா கடத்திய வழக்கில் சேலம், மதுரை, கோவை மாவட்டங்களை சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெருமாள்பல்லி சோதனை சாவடியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பரதராமி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஈரோட்டிற்கு தோல்களை ஏற்றி சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 36 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா வரிமரிச்சான் கிராமத்தை சேர்ந்த முத்துக்காளை(30), திருச்செந்தூரான்(47) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பட்டி தாலுகா கல்லேரிபட்டி அடுத்த கல்யாணகிரி கிராமத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி பாஸ்கர்(33), கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ்(33), வேல்பாண்டியன்(33), மதுரை மாவட்டத்தை சேர்ந்த அஜிமீர் காஜா மைதீன் (31) ஆகிய 4 பேரை பரதராமி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

Advertisement