தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டோ டிரைவருக்கு ரூ.12.48 லட்சம் இழப்பீடு வேலூர் கோர்ட் உத்தரவு காட்பாடி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த

வேலூர், நவ.22: காட்பாடி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.12.48 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. காட்பாடி அடுத்த திருவலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40) ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2014ம் ஆண்டு சர்க்கரை ஆலையில் இருந்து, அரிமுத்து மோட்டூர் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த டூவீலர் எதிர்பாராதவிதமாக ராஜேஷ் பைக் மீது மோதியது. இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

விபத்து காரணமாக அவருக்கு 20 சதவீதம் மாற்றுத்திறன் ஏற்பட்டது. இந்நிலையில் தான் மாற்றுத்திறனாளியானதற்கு இழப்பீடு வழங்கக் கோரி வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் ராஜேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை குற்றவியல் நீதிபதி இசக்கியப்பன் விசாரித்தார். விசாரணையில் மனுதாரர் மாற்றுத்திறனாளியானதற்கு எதிரே வந்த பைக் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.12.48 லட்சமும், ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

Advertisement