தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான ஸ்ட்ரெச்சர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவு

வேலூர், செப்.22: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் போதுமான எண்ணிக்கையில் ஸ்ட்ரெச்சர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது.

Advertisement

இதில் சிறப்பு மற்றும் உயர் சிறப்பு வசதிகளுடன் 64,792 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் தினமும் சராசரியாக புறநோயாளிகள் பிரிவில் 1.15 லட்சம் பேரும், உள்நோயாளிகள் பிரிவில் 39 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோயாளிகளின் நலன் கருதி பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இதனால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் போதுமான எண்ணிக்கையில், ஸ்ட்ரெச்சர் மற்றும் சக்கர நாற்காலிகளை வழங்குமாறு மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குனரகம், அனைத்து மருத்துவக்கல்லூரி டீன்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவமனையில் ஸ்டான்ட் வசதியுடன் ஆக்சிஜன் சிலிண்டர், போதுமான எண்ணிக்கையில் ஸ்ட்ரெச்சர்கள், தள்ளுவண்டிகள், சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத்திட்டம், சிஎஸ்ஆர் நிதி அல்லது கிடைக்கக்கூடிய வேறு நிதியை பயன்படுத்தி, மருத்துவமனைக்கு தேவையான சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்களை அந்தந்த மருத்துவமனை நிர்வாகங்கள் வாங்கலாம்.

மாற்றுத்திறனாளி நோயாளிகளின் வசதிக்காக, லிப்ட் அருகில் சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்கள் வைக்க வேண்டும். மருத்துவமனையின் அனைத்து வார்டுகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவுகளில், சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர் நிறுத்தி வைக்க இடங்களை உருவாக்க வேண்டும். நோயாளி மற்றும் உதவியாளர்கள் வசதி இல்லாமல் பாதிக்கப்படக்கூடாது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவரது உதவியாளர்கள் எளிதில் அணுகும் வகையில், சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement