தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வியாபாரியிடம் ரூ.5.31 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைப்பதாக கூறி

வேலூர், ஆக.20: ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைப்பதாக கூறி வியாபாரியிடம் ரூ.5.31 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி, கழிஞ்சூரை சேர்ந்தவர் அருண்குமார் (41). சாலையோரம் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை பார்த்துள்ளார். இதைக்கண்ட அருண்குமார் அதில் குறிப்பிடப்பட்டு இருந்த வெப்சைட்டை திறந்து பார்த்துள்ளார். அப்போது, அருண்குமார் செல்போன் எண்ணை வாட்ஸ் அப் குரூப்பில் சேர்த்து அதிக பணம் பெற்றவர்களின் விவரங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தனர். இதனை உண்மை என நம்பிய அருண்குமார் கடந்த மாதம் 21ம் தேதியிலிருந்து கடந்த 7ம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.5 லட்சத்து 31 ஆயிரத்து 300ஐ ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தார். அருண்குமார் முதலீடு செய்த பணத்திற்குரிய லாபம் கிடைக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு கேட்டார். அவர்கள் மேலும் பணம் முதலீடு செய்தால் லாபம் கிடைப்பதாக தெரிவித்தனர். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து வேலூர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement