தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெருமுகை ஊராட்சி தலைவர் செக் பவர் ரத்து கலெக்டர் அதிரடி நிதி முறைகேடு புகார் எதிரொலி

வேலூர், நவ.19: நிதி முறைகேடு புகார் எதிரொலியால், பெருமுகை ஊராட்சி மன்றத் தலைவர் செக் பவரை ரத்து செய்து, துணை தலைவர், செயலாளருக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று அதிரடி உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம் வேலூர் ஊராட்சி ஒன்றியம் பெருமுகை ஊராட்சி மன்றத் தலைவராக புஷ்பராஜ் என்பவர் உள்ளார். இந்த ஊராட்சியில் பெருமளவு நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் மீதான ஆரம்பக்கட்ட விசாரணையில் நிதி முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஊராட்சி மன்றத்தலைவர் புஷ்பராஜூக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பராஜின் செக் பவரை ரத்து செய்து கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று உத்தரவிட்டார்.

Advertisement

அதேபோல் நிதி முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரபு, ஊராட்சி செயலாளர் அருள் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செக் பவர் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘நிதி முறைகேடு தொடர்பான புகார்களின் மீது விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நடந்து வரும் நிலையில் ஊராட்சி மன்றத் தலைவரின் செக் பவர் கலெக்டரால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நிதிமுறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Advertisement