தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசனவாயில் மறைத்து கஞ்சா கடத்திய 2 கைதிகள் சிக்கினர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கடிதம் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பும்போது

வேலூர், நவ.19: கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பும்போது ஆசனவாயில் மறைத்து கஞ்சா கடத்திய 2 கைதிகள் சிக்கினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருவண்ணாமலை எஸ்பிக்கு நடவடிக்கை பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய விசாரணை, தண்டனை கைதிகள் என்று 700க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவைகளை சிறை காவலர்கள் சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். இதுபோல் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களையும் கைப்பற்றி வருகின்றனர்.

Advertisement

இதற்கிடையில், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கவி பாலாஜி (26), திருவண்ணாமலை புது வானியங்குல 8வது தெருவைச் சேர்ந்த மதன்குமார்(27), அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(31) ஆகிய 3 பேரும் போக்சோ விசாரணை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் 3 பேரையும் நேற்று முன்தினம் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு வேலூர் சிறைக்கு அழைத்து வந்தனர். அப்போது நுழைவாயிலில் இருந்த காவலர்கள், 2 பேரையும் சோதனையிட்டபோது, மதன்குமார் மற்றும் மணிகண்டன் இருவரின் ஆசனவாயிலில் தலா 10 கிராம் கஞ்சா என்று மொத்தம் 20 கிராம் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், கைதி கவி பாலாஜி என்பவரின் நண்பர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பிட கட்டிடத்தில் வைத்து விட்டு சென்றதாகவும், அதனை இருவரும் எடுத்து ஆசனவாயில் வைத்துக் கொண்டு கடத்தியதாக தெரியவந்தது. இதுதொடர்பாக பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் 3 பேரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறைக்கு திரும்பும் கைதிகள் கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. கைதிகள் கஞ்சா கடத்த உதவும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் திருவண்ணாமலை எஸ்பிக்கு சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement