தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தடுப்பணை நீரில் மூழ்கி லேப் டெக்னீசியன் பலி பள்ளிகொண்டா அருகே சோகம் பாலாற்றில் குடும்பத்துடன் குளிக்க சென்றபோது

பள்ளிகொண்டா, நவ.18: வேலூர், சின்ன அல்லாபுரம் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் அகமது(40). கஸ்பாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ரியாஸ் அகமது, தனது மனைவி பாத்திமா தபசும், மகன் பாரிஸ் அகமது, மகள் ஹனியா பாத்திமா ஆகியோருடன் இறைவன்காடு- கவசம்பட்டு பாலாறு இடையே உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, ரியாஸ் அகமது கால் இடறி நீரின் ஆழமான பகுதியில் மூழ்கியுள்ளார். இதனையறிந்து அவரது மனைவி கத்தி கூச்சலிட்டுள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரியாஸ் அகமது மீட்டபோது அவர் நீரிலேயே மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தகவலறிந்து சென்ற பள்ளிகொண்டா போலீசார் சடலத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ரியாஸ் அகமது மனைவி கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News