தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5.28 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை வாட்ஸ் ஆப் குரூப் மூலம் முதலீடு மெசேஜ் அனுப்பி

Advertisement

வேலூர், அக்.18: வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்து குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஆசை காட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5.82 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி குமரன் நகரை சேர்ந்த 27 வயது இளைஞர். இவர் தனியார் நிறுவனத்தில் சீனியர் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மொபைல் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஓட்டல், ரெஸ்டாரண்டுகளுக்கு மதிப்பீடு செய்வது குறித்தும், இலக்கு குறித்தும் குறுந்தகவல் வந்துள்ளது. இதை நம்பி அவர்கள் கொடுத்த டாஸ்க்கை முடித்து மதிப்பீடுகளை அனுப்பி சிறிய அளவில் கமிஷன் பெற்றார்.

தொடர்ந்து அவருக்கு ‘கூகுள் ரிவ்யூ டாஸ்க் ரிலீஸ் குரூப் டி7’ என்ற லிங்க்கை கிளிக் செய்யுமாறும், அதன் மூலம் முதலீடு செய்தால் தொடர்ந்து லாபம் கிடைக்கும் என்றும் தகவல் வந்துள்ளது. அதை நம்பி வாட்ஸ்ஆப் குரூப்பில் மேற்கண்ட தனியார் நிறுவன அதிகாரி இணைந்துள்ளார். அந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் பிசினஸ் தகவல் பரிமாற்றங்களை கண்டு தானும் முதலீடு செய்யலாம் என்ற எண்ணத்தில் கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை பலவகையான பணபரிமாற்றங்களாக ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 168ஐ செய்துள்ளார். ஆனால் அவர் முதலீடு செய்த பணபரிமாற்றங்களுக்கான லாபம் வரவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டு பணத்தை திரும்பத்தருமாறு கேட்டபோது, மேலும் பணபரிமாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற பதில் கிடைத்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனியார் நிறுவன அதிகாரி இதுதொடர்பாக கடந்த 14ம் தேதி வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ரஜனிகாந்த், சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News