தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.5.30 லட்சம் மோசடி செய்த தம்பதி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி

வேலூர், செப்.18: கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.30 லட்சம் மோசடி செய்த சென்னை தம்பதி மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் எஸ்பி மயில்வாகனன் தலைமையில், சைபர் கிரைம் ஏடிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில், குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் 10ம் வகுப்பு படித்துவிட்டு டிரைவிங் லைசென்ஸ் பெற்று வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் காட்பாடி அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர், குடியாத்தத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்வதாகவும், எனக்கு டிரைவர் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். அதற்கு பணம் செலாகும் என்றும் தெரிவித்தார். அதன்படி கடந்த 2016ம் ஆண்டு பல்வேறு தவணைகளாக ரூ.1 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் அவர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகிறார். அவரிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Advertisement

காட்பாடி வெப்பாலை பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் அளித்த மனுவில், ‘சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தம்பதியினரிடம் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர்கள் எனது மகனுக்கு கிராம உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறினர். அவர்கள் தெரிவித்தபடி கடந்த 2022ம் ஆண்டு ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்தை கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் வேலை வாங்கி தரவில்லை. மேலும் பணத்தையும் தரமறுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்’ என தெரிவித்திருந்தார். பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்பவர் அளித்த மனுவில், ‘பேரணாம்பட்டு பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். போலீசார் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், 50 போலீசாரை நியமிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதேபோல் பல்வேறு மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு அனுப்பி வைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News