தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொம்புடன் சுவரில் மாட்டியிருந்த 2 மான் தலைகள் பறிமுதல் தொழிலாளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் ஒடுகத்தூர் அருகே சோதனையின்போது

ஒடுகத்தூர், செப்.17: ஒடுகத்தூர் அருகே கொம்புடன் சுவற்றில் மாட்டியிருந்த 2 மானின் தலைகளை வனத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். மேலும் தொழிலாளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனர்‌. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் இறந்த மானின் தலைகளை வைத்திருப்பதாக நேற்று மாவட்ட வன அலுவலர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உதவி வனப்பாதுகாவலர் மணிவண்ணன் அறிவுறுத்தலின் பேரில் ஒடுகத்தூர் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனத்துறையினர் நேற்று வரதலம்பட்டு கிராமத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

Advertisement

அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பூபதி(50) என்பவரது வீட்டில் சோதனை நடத்திய போது வீட்டு சுவரில் இறந்த மானின் கொம்புடன் 2 தலைகள் அங்கு மாட்டியிருந்தது. இதனைப்பார்த்த வனத்துறையினர் உடனே கொம்புடன் மானின் தலைகளை கைப்பற்றினர். பின்னர், பூபதியிடம் நடத்திய விசாரணையில் ‘பல ஆண்டுகளுக்கு முன்பு காட்டு பகுதிக்கு சென்ற போது அங்கு கொம்புடன் இறந்த நிலையில் மான்கள் இருந்துள்ளது. அதனை எடுத்து வந்து வீட்டு சுவரில் மாட்டி வைத்ததாக பூபதி கூறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து, வனத்துறையினர் வழக்குப்பதிந்து பூபதியை கைது செய்தனர். தொடர்ந்து சட்டவிரோதமாக கொம்புடன் இறந்த மானின் தலைகளை வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனர். மேலும், இனி இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து அவரை அனுப்பி வைத்தனர். ஒடுகத்தூர் அருகே கொம்புடன் இறந்த மானின் தலைகளை வைத்திருந்த நபரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News