தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது விஜிலென்ஸ் போலீசார் நடவடிக்கை வேலூரில் ஓய்வுபெற்ற வனபாதுகாவலர் மனைவியிடம்

வேலூர், அக்.16: வேலூரில் ரூ.2.18 லட்சம் நிலுவை தொகையை விடுவிக்க ஓய்வுபெற்ற வனபாதுகாவலர் மனைவியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளரை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவர் வேலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனபாதுகாவலராக பணியாற்றி கடந்த 2022ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவருக்கு ரூ.2.18 லட்சம் அரியர் மற்றும் சம்பள தொகை நிலுவையில் இருந்துள்ளது. இதற்கிடையில் ஜெயவேல் கடந்த மாதம் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது மனைவி வசந்தி(55). தனது கணவருக்கு வர வேண்டிய நிலுவை தொகை குறித்து கேட்க வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தை அணுகி உள்ளார்.

Advertisement

அப்போது அதே அலுவலகத்தில் இ பிரிவில் பணிபுரிந்த இளநிலை உதவியாளர் ஏழுமலை, வசந்தியிடம் நிலுவை தொகை வேண்டும் என்றால் கருவூலத்தில் உள்ள அலுவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும். இதனால் ரூ.10 ஆயிரத்தை கொண்டு வரும்படி தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வசந்தி இதுகுறித்து வேலூர் விஜிலென்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைபடி ரூ.10 ஆயிரம் லஞ்சம் பணத்தை நேற்று மாலை அலுவலக்தில் வைத்து இளநிலை உதவியாளர் ஏழுமலையிடம் வசந்தி கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த வேலூர் விஜிலென்ஸ் டிஎஸ்பி சங்கர் தலைமையிலான இன்ஸ்பெக்டர் மைதிலி மற்றும் போலீசார் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் வனத்துறை அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement