தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய 2 மாணவர்கள் கைது காட்பாடியில் சிக்கினர் பெங்களூருவில் இருந்து

வேலூர், செப்.16: பெங்களூருவில் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய கல்லூரி மாணவர்கள் 2 பேர் காட்பாடியில் சிக்கினர். பெங்களூரில் இருந்து வேலூருக்கு போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக காட்பாடி போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த 2 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் வேலூர் சேண்பாக்கம் பிரதீஸ்(20), சத்துவாச்சாரி அன்பு நகர் சிவகணேஷ்(21) என்பதும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களது பையை சோதனை செய்தபோது, அதில் 4 கிராம் மெத்தபெட்டமைன் எனும் போதை பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ஒரு கிராம் ரூ,2500 ரூபாய் முதல் ரூ.3000 வரை இருக்கும் என கூறப்படுகிறது. பறிமுதல் செய்த அதன் மதிப்பு ரூ.12,000 இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Advertisement