தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணிக்கு இன்று முதல் 155 சிறப்பு பஸ்கள் இயக்கம் பொதுமேலாளர் தகவல் வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து

வேலூர், ஆக.14: ஆடி கிருத்திகையையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து திருத்தணிக்கு 155 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக பொதுமேலாளர் தெரிவித்தார். ஆடி கிருத்திகை விழாவின்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், முருகனின் அறுபடை வீடு உள்பட பல்வேறு முருகன் கோயில்களுக்கு காவடி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்தாண்டு நாளை பரணி காவடியும், நாளை மறு தினம் 16ம் தேதி ஆடி கிருத்திகையும் நடக்கிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து திருத்தணிக்கு செல்கின்றனர். இதையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு இன்று முதல் 17ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Advertisement

இதில் வேலூரில் இருந்து திருத்தணிக்கு 60 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 30 பஸ்களும், சோளிங்கரில் இருந்து 5பஸ்களும், குடியாத்தத்தில் இருந்து 15 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 25 பஸ்களும், ஆம்பூரில் இருந்து 10 பஸ்களும், பேரணாம்பட்டில் இருந்து 10 பஸ்களும் என மொத்தம் 155 பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் ஆடிக்கிருத்திகையையொட்டி வேலூர் மண்டலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரிக்கு 10 பஸ்கள், வேலூர் மாவட்டம் வள்ளிமலைக்கு 8 பஸ்கள், திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறைக்கு 5 பஸ்கள், கைலாசகிரிக்கு 10 பஸ்கள் 16ம் தேதி வரை இயக்கப்படும். மேலும் தேவைக்கு ஏற்ப பஸ்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என்று வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் தெரிவித்தார்.

Advertisement

Related News