தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.50 லட்சம் நிதி திரட்டி உயிரிழந்த 10 போலீசாரின் குடும்பத்துக்கு உதவி 1993ம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர்கள் ஏற்பாடு தமிழகம் முழுவதும்

வேலூர், நவ.13: கடந்த 1993ம் ஆண்டு பேட்சை சேர்ந்த போலீசார் தமிழகம் முழுவதும் ரூ.50 லட்சம் நிதி திரட்டி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர். வேலூர் ஓட்டேரியை சேர்ந்தவர் கணேஷ்பாபு(56). இவர் திருப்பத்துார் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். இவருக்கு ஜமுனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் கடந்த 1993ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். அந்த ஆண்டின் பிரிவில் மொத்தம் 5,000 பேர் போலீஸ் பணியில் சேர்ந்தனர். இவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் பணியில் இருந்தபோது உயிரிழந்த 1993ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த போலீசாரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க, அதேபிரிவைச் சேர்ந்த போலீசார் முடிவு செய்து மொத்தம் ரூ.50 லட்சம் ரூபாய் நிதி திரண்டது. அந்த நிதியை தமிழகம் முழுவதும் பணியின் போது உயிரிழந்த 10 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்தனர். அதன்படி கணேஷ்பாபுவின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்தை, அதே ஆண்டு பிரிவைச் சேர்ந்த வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார், கணேஷ்பாபுவின் இல்லத்தில் அவரது மனைவியிடம் நேற்று வழங்கினர். அப்போது இன்ஸ்பெக்டர் காண்டீபன் உட்பட 20க்கும் மேற்பட்ட அதே பிரிவைச் சேர்ந்த போலீசார் உடன் இருந்தனர்.

Advertisement