தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாம்பழ கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ.12.25 லட்சம் மானியம் வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு

வேலூர், டிச.12: வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மாம்பழ கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ.12.25 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஜரினாபேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘பழங்களின் அரசன்’ என்று மாம்பழம் பெருமையாக அழைக்கப்படுகிறது. மா உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் தமிழ்நாடு 7ம் இடமும், தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் 7ம் இடமும் வகிக்கிறது. வேலூர் மாவட்டத்தில் மா பயிரானது சராசரி 5,800 ஹெக்டேர் பரப்பில் 44,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முக்கியமாக குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணம்பட்டு, அணைக்கட்டு வட்டாரங்களில் மா அதிகமாக பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் விவசாயிகள் தங்களது மா உற்பத்தியை ஆந்திர மாநில மாங்கூழ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

Advertisement

சென்ற ஆண்டு மா விவசாயிகள் மகசூல் எடுத்தது விற்பனை செய்ய இயலாமல் நஷ்டமடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு தோட்டக்கலை துறை மூலமாக மாம்பழக்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க அரசு ரூ.12.25 லட்சம் மானியம் வழங்க உள்ளது. எனவே வேலூர் மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலை துணை இயக்குநர் அல்லது உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement