தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அவர்கள் வீட்டுக்குள் நடக்கிற விஷயம் நமக்கு எதுக்கு வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்

வேலூர், செப்.12: அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம் என்பது அவர்கள் வீட்டுக்குள் நடக்கிற விஷயம். அது நமக்கு எதுக்கு என்று வேலூரில் அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் சேண்பாக்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு மனு அளித்த பயனாளிகளுக்கு அதற்கான ஆணையை வழங்கினார். பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை பகுதியில் அமைந்துள்ள நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அப்பணிகளுக்கான நடவடிக்கைகள் துவக்கப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தம் விவாகாரத்தில் தமிழகம் பீகாரை போன்று அல்ல. தமிழகம் அதிகளவு விழிப்புணர்வு பெற்ற மாநிலம். அங்கு நடக்கக்கூடிய ஆட்சி இங்கு நடைபெறவில்லை. இங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். அவர்கள் சொல்வது தமிழ்நாட்டில் நடைபெறாது.

Advertisement

சட்டமன்றத் தேர்தலுக்குள் திமுக கூட்டணி சிதைந்து விடும் என எடப்பாடி அப்படித்தான் கூறுவார். பாவம் அவர் என்ன செய்வார். ஏதாவது பேச வேண்டும் என்று பேசுகிறார். அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர். அவர் எங்களுக்காகவா பேசுவார்? அவர் அவருக்காக தான் பேசுவார். பழிவாங்கும் நோக்கோடு திமுக செயல்படுவதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்தன் கூறும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அவர்களுக்கு அரசியலில் சர்வீஸ் இல்லை. இதிலிருந்தே தெரிகிறது தவெக எந்த அளவுக்கு அரசியல் அனுபவம் உள்ளது என்று. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு ரூ.1500, 2000 கோடி என வழங்கி வருகிறார். தமிழகத்திற்கு அதைப்போல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என கேட்டதற்கு? தமிழகத்திற்கு கெட்ட பெயர் வர வேண்டும் என்று பாரதப் பிரதமர் நினைத்தால் அது நல்லதல்ல. அவர் அப்படித்தான் நினைப்பார் போல என தெரிகிறது. அன்புமணி ராமதாஸ் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது. அவர்கள் வீட்டுக்குள் நடக்கிற விஷயம் நமக்கு எதுக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement