தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம் கே.வி.குப்பத்தில் நடந்த

கே.வி.குப்பம், ஆக.12: கே.வி.குப்பத்தில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடந்து வருகிறது. இங்கு பல்வேறு இன ஆடுகள் திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல் விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால் ஆடு வியாபாரிகள் அதிகளவில் கூடுகிறார்கள். கடந்த மாதங்களில் நடந்த சந்தைகளில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல லாபம் கிடைத்ததாக ஆடு வளர்பவர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், திங்கட்கிழமையான நேற்று காலை வழக்கம்போல ஆட்டுச்சந்தை கூடியது. ஆனால், கடந்த வாரங்களை போல் இல்லாமல் நேற்று நடந்த சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக இருந்தது. காட்பாடி, குடியாத்தம், பரதராமி, ஒடுகத்தூர் உட்பட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆடு வளர்ப்பவர்கள் விற்பனைக்காக தங்களது ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். அதேபோல், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரத்தை போல் ஆடுகள் வியாபாரம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வியாபாரம் மந்தமாக நடந்ததால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.