தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்சோ கைதி தற்கொலை முயற்சி வேலூர் மத்திய சிறையில்

வேலூர், டிச.11: வேலூர் மத்திய சிறையில் போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(28). ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் போலீசில் இவர் மீது போக்சோ வழக்கு பதிவானது. இந்த வழக்கில் ராணிப்பேட்டை கோர்ட், கடந்த ஜூலை 23ம் தேதி கன்னியப்பனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மத்திய சிறையில் உள்ள கோழி பண்ணையில் கன்னியப்பன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள 3வது பிளாக்கின் பின்புறம் உள்ள புளியமரத்தில் கன்னியப்பன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைக்கண்ட சக கைதிகள் மற்றும் சிறைக்காவலர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிசிச்சைக்காக அனுமதித்தனர். கன்னியப்பன் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை உடனிருந்து கவனிக்க யாரும் இல்லை என்ற மனவருத்தத்தில் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News