தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபருக்கு போலீசார் வலை உதவி கேட்க வந்ததுபோல்

வேலூர் நவ.11: காட்பாடியில் ஆதரவற்றோருக்கு உதவி கேட்க வந்ததுபோல் பைக் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். காட்பாடி குமரப்பா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன், பைக் ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா(30). மேல்மாடியில் வசிக்கின்றனர். நேற்று காலை இவர்களது வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த ஹேண்ட் பேக்கை திருடி சென்றுள்ளார். அதில் ரூ.2000, 1 சவரன் கம்மல், 1 செல்போன் ஆகியவை இருந்துள்ளது. வீட்டில் இருந்து இறங்கி வரும்போது கீழ் வீட்டில் வசித்து வந்தவர், அந்த நபரிடம் ‘யார் நீ, யாரை பார்க்க வந்தாய்’ என கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர், ஆதரவற்றோருக்கு உதவி கேட்க வந்ததாக கூறிவிட்டு சென்றுவிட்டாராம். இதையறிந்த கிருத்திகா, வீட்டில் வந்து பார்த்தபோது நகை, பணம், செல்போன் இருந்த பையை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கிருத்திகா காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement