தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் ஏ.சி.சண்முகம் பேட்டி வேலூரில் புதிய நீதிக்கட்சி போட்டியிட வாய்ப்புள்ளது

வேலூர், நவ.11: வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் நினைவிடத்தில் நாளை திருமுருக கிருபானந்த வாரியார் குரு பூஜை நடக்க உள்ளது. நேற்று மாலை புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் நேரில் வந்து திருமுருக கிருபானந்த வாரியார் நினைவிடத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய நீதிக்கட்சியை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். வேலூர் சட்டமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சி போட்டியிட வாய்ப்புள்ளது. ஆனால், நான் போட்டியிட மாட்டேன். நாளை மறுதினம் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் குருபூஜை ஒட்டபிடாரத்தில் நடக்கிறது.

Advertisement

அவருக்கு மணிமண்டபம் கட்ட வரும் 18ம் தேதி காலையில் அடிக்கல் நாட்டுகிறோம். அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக மாறி மாறிதான் ஆட்சிக்கு வந்துள்ளன. தமிழகத்தில் மது, பிற போதை பொருட்களை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து எல்லா கட்சிகளும் குறை சொல்கின்றன. ஒரு சிலருக்கு வெவ்வேறு இடங்களில் ஓட்டு இருக்கும். அதனை எல்லாம் சரி செய்வதற்காகவே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கியது என்பது துரதிருஷ்டவசமானது. அவரும், நானும் 1972ல் இருந்து கட்சிக்காரர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement