தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபரிடம் ரூ.7.52 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக கூறி

வேலூர், அக்.11: பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக கூறி வாலிபரிடம் ரூ.7.52 லட்சம் மோடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் அடுத்த செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு, அவரது டெலிகிராம் எண்ணிற்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தகவல் வந்துள்ளது. அதில் இருந்த லிங்கில் சென்று, அந்த குழுவில் இணைந்துள்ளார். அந்த குழுவில் இருந்த உறுப்பினர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்து, அதன் வாயிலாக கிடைத்த லாபம் குறித்து குழுவில் பதிவிட்டுள்ளனர். மேலும் அதுதொடர்பான இணையதள லிங்க்கையும் குழுவில் வெளியிட்டுள்ளனர். அதை உண்மை என நம்பி, பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அந்த நபர் ஆர்வம் காட்டியுள்ளார்.

Advertisement

அதன்படி கடந்த மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை பல தவணைகளாக ரூ.7.52 லட்சம் ரூபாயை அந்த இணையதளத்தில் முதலீடு செய்துள்ளார். அந்த தொகைக்கு அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளதாக இணையதள கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரால் அந்த தொகையை எடுக்க முடியவில்லை. அப்போது இணையதள நபர்களிடம் பணத்தை எடுக்க முடியவில்லை என கூறியபோது கூடுதலாக முதலீடு செய்யுமாறு தெரிவித்துள்ளனர். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News