தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறிப்பு பிரபல ரவுடியின் மைத்துனர் கைது வேலூர் பாலாற்றங்கரையோரம்

வேலூர், செப்.11: வேலூரில் வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த பிரபல ரவுடியின் மைத்துனரை போலீசார் கைது செய்தனர். வேலூர் புதுவசூரை சேர்ந்தவர் விக்ரம்(29). இவர் பிரபல ரவுடி வசூர் ராஜாவின் மைத்துனர் ஆவார். விக்ரம் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. வேலூர் அடுத்த பொய்கை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (30). இவர் வேலூரில் உள்ள தனியார் ஏஜென்சியில் டெலிவரிபாயாக வேலை செய்து வருகிறார். ஜெயபிரகாஷ் நேற்று முன்தினம் வேலை விஷயமாக புதுவசூர் பாலாற்றங்கரையோரம் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விக்ரம், ஜெயபிரகாஷை வழிமறித்து தடுத்து நிறுத்தினார். பின்னர் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ஆயிரம் ரூபாயை விக்ரம் பறித்துக் கொண்டார். மேலும் தன் மீது எத்தனை வழக்குகள் உள்ளது என்று உனக்கு தெரியுமா? பணம் பறித்தது குறித்து போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினாராம். இதுகுறித்து ஜெயபிரகாஷ் சத்துவாச்சாரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுவசூரில் பதுங்கி இருந்த விக்ரமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement