தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தந்தையின் நண்பர் கைது பேரணாம்பட்டு அருகே

குடியாத்தம், ஆக.9: பேரணாம்பட்டு அருகே சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தந்தையின் நண்பர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் உள்ளார். கடந்த சில தினங்களாக சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது பெற்றோர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாதங்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர், குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சிறுமியிடம் நேரில் சென்று விசாரணை செய்தனர். அதில், சிறுமியின் தந்தையின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த ராஜா(40) என்பவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜாவை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.