தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓவியம், கட்டுரை போட்டிகளில் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு வன உயிரின வாரவிழாவையொட்டி

வேலூர், அக்.8: வன உயிரின வாரவிழாவையொட்டி ஓவியம், கட்டுரை போட்டிகளில் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசு வழங்கப்படுகிறது. வன உயிரின வார விழா கொண்டாடுவதற்கு, அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது, பல்லுயிர் பெருக்கத்தைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மற்றும் வன உயிரினங்களுக்கு ஏற்பட்டு வரும் ஆபத்துகளான காடழிப்பு, பருவநிலை மாற்றம் போன்றவற்றைக் குறைப்பது போன்ற பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவில் இந்த விழா கொண்டாடப்பட்டு, வன விலங்குகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு உணர்த்தப்படுகிறது.

Advertisement

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு வனப்பகுதியை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வனத்துறை சார்பில் இந்தாண்டு மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு, வினாடி வினா போட்டிகள் நேற்று நடந்தது. வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வனச்சரக அலுவலர்கள் முரளி, பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை (இன்று) பரிசு வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News