தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடும் பஸ்சில் 4 சவரன் நகை திருட்டு

வேலூர், அக்.8: வேலூரில் ஓடும் பஸ்சில் 4 சவரன் நகை திருட்டு போனது. வேலூர் விருபாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் முனிசாமி மனைவி மணியரசி(73). இவர் வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகை கடை ஒன்றில் நகை சேமிப்புத்திட்டத்தில் சேர்ந்துள்ளார். முதிர்வு காலம் முடிந்ததும், கடந்த 3ம் தேதி மாலை 5 மணியளவில், அதற்கான பணத்திற்கு 4 சவரன் தங்கச் செயினை வாங்கிக் கொண்டு அரசு டவுன் பஸ்சில் வீட்டுக்கு திரும்பினார். விருபாட்சிபுரம் பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி தனது கைப்பையை பார்த்த போது அதில் இருந்த 4 சவரன் தங்கச் செயின் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை யாரோ மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டு பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக மணியரசி கொடுத்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement