தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபத்திருவிழா சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.1.05 கோடி வருவாய் அதிகாரிகள் தகவல் வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு

வேலூர், டிச.7: திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்கள் மூலம் வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு ரூ.1.05 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதேபோல் சித்ரா பவுர்ணமி விழாவில் திருவண்ணாமலை செல்லும் அதிகளவிலான பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டும் 200க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 3ம் தேதி திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப விழா வெகு சிறப்பாக நடந்தது. தீபத்திருவிழா காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு பயணம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில், பஸ்கள் இயக்கப்பட்டன.

Advertisement

அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 100 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 70 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 60 பஸ்களும் என 230 சிறப்பு பஸ்கள் கடந்த 3, 4ம் தேதிகளில் இயக்கப்பட்டன. இதன்மூலம் வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு ரூ.1.05 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கியது வேலூர் போக்குவரத்து மண்டலம். இந்த மண்டலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தையொட்டி, வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 3ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 3, 4ம் தேதி 230 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதன்மூலம் வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு ரூ.1.05 கோடி வருவாய் கிடைத்துள்ளது’ என்றனர்.

Advertisement